22.10.2013 அன்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றியபின் அங்கே தொழுகையை
முடித்த சகோதரர் ஒருவர் தனது கையில் தாயத்தை கட்டிருந்தார். அவருக்கு
"தாயத்து தொங்க விட்டவன் அல்லாஹ்விற்கு இனைகர்பிதுவிட்டான்" என்ற ஹதீஸை
எடுத்து கூறி "அல்லாஹ் தனக்கு இணைகற்பிப்பதை ஒருகாலும் மன்னிக்க மாட்டான்
அது அல்லாத பாவங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பான்" என்பன போன்ற குர்ஆன்
வசனங்களையும் எடுத்து கூறி இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ:
பாஷித் அஹமத் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். விளக்கத்திற்கு செவிமடுத்த
அந்த சகோதரர் அல்லாஹ்வின் கிருபை கொண்டு தான் கட்டியிருந்த தாயத்தை
தானாகவே அறுத்து எறிந்தார்.
அல்ஹம்ந்துலில்லாஹ்
ஏகத்துவ பிரசாரம் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.
Basith Ahamed (Bangkok)
+66910684087
Source: http://www.ramnadtntj.com/2013/10/blog-post_921.html
No comments:
Post a Comment