Monday 11 November 2013

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்

10.11.2013 அன்று பாங்காக்கில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றியபின் அங்கே நாலைந்து தவ்ஹீத் சிந்தனை கொண்ட சகோதரர்களை கூட்டி மார்க்கம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் பள்ளியிலே நடைபெற்றது.

பின்னர் "நாம் அறிந்த சத்தியத்தை பிறருக்கு எத்தி வைக்க வேண்டும், உலக பொருதார சம்பாத்தியத்துடன் மறுமை வாழ்க்கைக்கும் பிறருக்கு சத்தியத்தை எடுத்துரைப்பதன் மூலம் நன்மையை சம்பாரிக்க வேண்டும்" என்று இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ: பாஷித் அஹமத் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். விளக்கத்திற்கு செவிமடுத்த அந்த சகோதரர்கள் அல்லாஹ்வின் கிருபை கொண்டு ஏகத்துவ பிரசாரம் மேற்கொள்ள ஏகோபித்த முடிவுக்கு வந்தனர். வாரம் வாரம் ஞாயிற்று கிழமை அஷர் தொழுகைக்கு பின் வாரந்திர பயான் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்ந்துலில்லாஹ்

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

source: http://www.ramnadtntj.com/2013/11/blog-post_634.html?m=0

No comments:

Post a Comment